செய்திகள்
விபத்து

நாங்குநேரி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2019-11-29 11:34 GMT   |   Update On 2019-11-29 11:34 GMT
நாங்குநேரி அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

வெங்கட்ராயபுரம் அருகே உள்ள விரனாஞ்சேரியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவர் மூன்றடைப்பில் டீ கடை நடத்தி வருகிறார். இவருடன் அவரது தாய் பூவம்மாள் (70) வசித்து வந்தார். சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்து சென்ற பூவம்மாள் நீண்டநேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை. அக்கம் பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து முருகன் அப்பகுதியில் தேடி சென்ற போது அங்குள்ள தனியார் மில் அருகே நான்குவழிச் சாலையில் பூவம்மாள் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

இது குறித்து முருகன் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பூவம்மாள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்.

Tags:    

Similar News