செய்திகள்
நெல்லையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
நெல்லையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை பேட்டை அருகே உள்ள குன்னத்தூர் ஞானம்மாள் கட்டளை தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் ஆறுமுகம் (வயது 20). நேற்று இவர் அந்தப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது ஒரு மோட்டார்சைக்கிளில் 3 பேர்கள் வேகமாக சென்றார்கள். அவர்களை ஆறுமுகம் மெதுவாக செல்லும்படி கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த 3 பேர்களும் அரிவாளால் ஆறுமுகத்தை சரமாரி வெட்டிவிட்டு ஓடிவிட்டார்கள். இதில் ஆறுமுகத்தின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலக் குன்னத்தூரைச் சேர்ந்த மாரிச்செல்வம் (21), மாரிமுத்து (18) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் விஜய் (20) என்பவரை தேடிவருகிறார்கள்.