செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

கோவையில் மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை

Published On 2019-11-29 11:03 GMT   |   Update On 2019-11-29 11:03 GMT
கோவையில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை சூலூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி ஜெகதாம்பாள் (49). இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மகன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெகதாம்பாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். அவரது மனைவி நாமகிரி (வயது 42). இவருக்கு உடல்நிலை சரியில்லாததாக தெரிகிறது. இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் மனவேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News