செய்திகள்
முற்றுகை

திண்டுக்கல் அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்த ஆசிரியர்- பெற்றோர்கள் முற்றுகை

Published On 2019-11-29 10:36 GMT   |   Update On 2019-11-29 10:36 GMT
திண்டுக்கல் அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்த ஆசிரியரை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடைரோடு:

திண்டுக்கல் அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் தவறான முறையில் பேசுவதாகவும், சில்மி‌ஷம் செய்வதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் புகார் அளித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் இன்று அரசு பள்ளி முன்பு முற்றுகையிட்டனர். சம்மந்தப்பப்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து அவரை பள்ளியில் இருந்து நீக்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.

இதனையடுத்து பள்ளிக்கு விளாம்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். கல்வி அதிகாரிகளிடம் எடுத்து கூறி உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இருந்தாலும் பெற்றோர்கள் தொடர்ந்து ஆசிரியரை பள்ளியில் இருந்து நீக்கும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News