செய்திகள்
செயின் பறிப்பு

நோனாங்குப்பம் பாலத்தில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற கொள்ளையர்கள்

Published On 2019-11-28 12:05 GMT   |   Update On 2019-11-28 12:05 GMT
நோனாங்குப்பம் பாலத்தில் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற ஹெல்மெட் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாகூர்:

தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. மீனவர். இவரது மனைவி வாணி (வயது40).  கணவன்- மனைவி இருவரும் நேற்று மாலை புதுவை சென்று விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

 நோனாங்குப்பம் பாலத்தில் வந்தபோது  பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்து 2 கொள்ளையர்கள்  திடீரென கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்தனர். பின்னர் வாணி கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 பவுன்செயினை பறித்தனர். கிருஷ்ணமூர்த்தியும் அவரது மனைவி வாணியும்  திருடன்.... திருடன் என அலறுவதற்குள் கொள்ளையர்கள் 2 பேரும்  மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். பறிபோன செயினின் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும்.

இது குறித்து கிருஷ்ணமூர்த்தி தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News