செய்திகள்
விபத்து

தேன்கனிக்கோட்டை அருகே பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி பைனான்ஸ் அதிபர் பலி

Published On 2019-11-26 14:14 GMT   |   Update On 2019-11-26 14:14 GMT
தேன்கனிக்கோட்டை அருகே பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியதில் பைனான்ஸ் அதிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தேன்கனிகோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கோகுலேதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது42). இவர் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டையில் இருந்து சாலிவாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தோணபள்ளி கூட்டுரோடு என்ற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News