காரமடையில் பள்ளி சென்ற அக்காள்- தங்கை மாயம்
கோவை:
கோவை காரமடை திம்மம்பாளையம் புதூரை சேர்ந்தவர் பழனிதுரை. பொம்மை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகள் கலைச்செல்வி (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
மாரியம்மாளின் தங்கை மகள் பிரியா (13). இவர்கள் வீட்டில் தங்கி அதே பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று அக்காள்- தங்கை இருவரும் பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறி சென்றனர். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர், நண்பர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து மாரியம்மாள் காரமடை போலீசில் புகார் செய்தார்.
அதில் மகள்கள் மாயமான அதே நாளில் எங்கள் கடை அருகே மற்றொரு பொம்மை கடையில் 2 பேரையும் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவிகளை தேடி வருகிறார்கள்.