செய்திகள்
பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்

திருவள்ளூரில் பிளாஸ்டிக் பை பயன்படுத்திய 15 கடைகளுக்கு அபராதம்

Published On 2019-11-26 08:51 GMT   |   Update On 2019-11-26 08:51 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 15 கடைகளுக்கு அதிகாரிகள் ரூ. 11 ஆயிரத்து 200 அபராதம் விதித்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முழுவதும் ஒழிக்க முழுவீச்சில் செயல்பட மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஒன்றியங்கள் ஆகிய அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில், தடையை மீறி, பிளாஸ்டிக் பை பயன்பாடு இருப்பதாக, கலெக்டர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்படி வட்டாட்சியர் பாண்டியராஜன், நகராட்சி ஆணையர் சந்தானம் தலைமையில், சுகாதார அலுவலர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள், ஜே.என்.சாலை, ராஜாஜி சாலையில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பேக்கரி, துணிக்கடை, பூக்கடை, ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தெரிந்தது. இதையடுத்து 15 கடைகளுக்கு ரூ. 11 ஆயிரத்து 200 அபராதம் விதித்தனர். 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News