செய்திகள்
ரங்கசாமி

புதுவையில் உலக சாதனைகள் புகைப்பட கண்காட்சி- ரங்கசாமி திறந்து வைத்தார்

Published On 2019-11-22 17:19 GMT   |   Update On 2019-11-22 17:19 GMT
புதுவையில் உலக சாதனைகள் புகைப்பட கண்காட்சியை முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான ரங்கசாமி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

புதுச்சேரி:

புதுவையின் பெருமை என்ற தலைப்பில் புதுவையில் அசிஸ்ட் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்ட உலக சாதனை நிகழ்ச்சிகளின் புகைப்பட கண்காட்சி தொடக்கவிழா ஆரோதன் ஆர்ட் கேலரியில் நடந்தது.

முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான ரங்கசாமி குத்துவிளக்கேற்றி புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். தமிழ்வாணன் வரவேற்றார். கண்காட்சி திறப்பு விழாவில் லலித்வர்மா, துபாய்குழந்தை ஆர்.இ.சேகர், கலியபெருமாள், பிரபாகரன், கந்தப்பன், சுகுமாரன், முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அசிஸ்ட் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் நிறுவனர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

இந்த கண்காட்சியில் புதுவையில் அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் பதிவு செய்யப்பட்ட 55 உலக சாதனைகள் புகைப்படங்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையும் இந்த கண்காட்சியை கண்டுகளிக்கலாம். 24-ந் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சர் வல்சராஜ் பங்கேற்கிறார்.

Tags:    

Similar News