செய்திகள்
மரணம்

திண்டுக்கல் அருகே மனைவியை மிரட்ட தீக்குளித்தவர் உடல் கருகி பலி

Published On 2019-11-22 09:43 GMT   |   Update On 2019-11-22 09:43 GMT
திண்டுக்கல் அருகே மனைவியை மிரட்ட தீக்குளித்தவர் உடல் கருகி பலியானார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள கன்னிவாடியை சேர்ந்தவர் கண்ணன் (வயது25). மது பழக்கத்திற்கு அடிமையானவர். சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி பிரியங்கா கண்டித்தார்.

இதனால் தனது மனைவியை மிரட்டுவதற்காக கண்ணன் தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். எதிர்பாராத விதமாக அவரது உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News