செய்திகள்
முக்கூடல் அருகே விஷம் குடித்து டிரைவர் உயிரிழப்பு
முக்கூடல் அருகே குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
முக்கூடல் அருகே உள்ள உடையாம்புளியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. நாகராஜ் அப்பகுதியில் சொந்தமாக ஆம்னி வேன் ஓட்டி வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்றும் இருவருக்கும் இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே நாகராஜன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரத்திற்கு பின்பு நள்ளிரவில் நாகராஜ் வீடு திரும்பியுள்ளார். அவர் மீது மருந்து வாசனை ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே சந்தேகம் அடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினரை அழைத்து நாகராஜை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே நாகராஜ் வாயில் நுரை தள்ளியபடி இறந்து விட்டார்.
இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கூடல் அருகே உள்ள உடையாம்புளியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. நாகராஜ் அப்பகுதியில் சொந்தமாக ஆம்னி வேன் ஓட்டி வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்றும் இருவருக்கும் இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே நாகராஜன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரத்திற்கு பின்பு நள்ளிரவில் நாகராஜ் வீடு திரும்பியுள்ளார். அவர் மீது மருந்து வாசனை ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே சந்தேகம் அடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினரை அழைத்து நாகராஜை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே நாகராஜ் வாயில் நுரை தள்ளியபடி இறந்து விட்டார்.
இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.