செய்திகள்
மாதாந்திர பராமரிப்பு

பருத்திபள்ளி, முசிறி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2019-11-21 18:08 GMT   |   Update On 2019-11-21 18:08 GMT
பருத்திபள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எலச்சிபாளையம்:

நாமக்கல் மின்பகிர்மான வட்டம் திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பருத்திபள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டிபாளையம், சோமனம்பட்டி, பருத்திபள்ளி, ராமாபுரம், அவினாசிபட்டி, பிள்ளாநத்தம், சீத்தகாடு, மோர்பாளையம், வட்டூர், ஆனகூராம்பாளையம், செம்மங்கட்டை, காங்கேயம்பாளையம், கொன்னையார், எலச்சிபாளையம், பி.கே.பாளையம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல நாமக்கல் மின்பகிர்மான வட்டம் திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட முசிறி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன்புதூர், குன்னங்கல்புதூர், கொட்டாம்பட்டி, நாய்கடிபுதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசபாளையம், மாரப்பநாய்க்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கிபாளையம், புத்தூர், வேப்பமரத்துபுதூர், மணிக்கட்டிபுதூர், கணக்கம்பாளையம், சிங்கலிபட்டி, பொமம்பட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பெய்யேரிபாளையம், சின்னதளிகை, தட்டராபாளையம் மற்றும் சுப்பாநாயக்கானூரர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் பானுமதி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News