செய்திகள்
காங்கிரஸ்

அரசை கண்டித்து நாளை தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2019-11-21 14:30 GMT   |   Update On 2019-11-21 14:30 GMT
கே.எஸ். அழகிரி தலைமையில் மத்திய அரசை கண்டித்து நாளை தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகில் நாளை (22-ந் தேதி) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராம், வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் வரவேற்கிறார்.

மேலும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய்தத், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், பொதுச்செயலாளர் அருள்பெத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டேனியல்ராஜ், ராணி வெங்கடேசன், சுடலையாண்டி, மாநில முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

எனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News