செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்த தாய்-மகன் கைது
ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்த தாய்-மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டி வைகை அணை சாலையில் பாலம் பகுதியில் வந்தபோது அங்கு 2 பேர் போலீசாரை கண்டதும் பதுங்கினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சீத்தாராம் நகரை சேர்ந்த சிவக்குமார்(48), அவரது தாய் சகுந்தலா (65) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் போடி நந்தவனதெருவில் நகராட்சி கழிப்பறை அருகே டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த போடி நந்தவனதெரு காந்தி மனைவி லட்சுமி(63) என்பவரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டி வைகை அணை சாலையில் பாலம் பகுதியில் வந்தபோது அங்கு 2 பேர் போலீசாரை கண்டதும் பதுங்கினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சீத்தாராம் நகரை சேர்ந்த சிவக்குமார்(48), அவரது தாய் சகுந்தலா (65) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் போடி நந்தவனதெருவில் நகராட்சி கழிப்பறை அருகே டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த போடி நந்தவனதெரு காந்தி மனைவி லட்சுமி(63) என்பவரை கைது செய்தனர்.