செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்: காங்கிரசார் இன்று விருப்ப மனு தாக்கல்
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விருப்ப மனு இன்று பெறப்பட்டது.
சென்னை:
உள்ளாட்சி மன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இன்று முதல் 23-ந்தேதி வரை மாவட்ட வாரியாக விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார்.
அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விருப்ப மனு இன்று பெறப்பட்டது. சென்னையில் தென்சென்னை மாவட்டத்திற்கு சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பாளர்கள் தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
கவுன்சிலர் பதவிக்கு ரூ.3 ஆயிரமும், மேயர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும் கட்டணமாக பெறப்பட்டது. இல.பாஸ்கரன், மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன் உள்பட 16 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
இதுபோல வடசென்னையில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், மத்திய சென்னையில் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஆகியோர் மனுக்களை பெற்றனர்.
உள்ளாட்சி மன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இன்று முதல் 23-ந்தேதி வரை மாவட்ட வாரியாக விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார்.
அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விருப்ப மனு இன்று பெறப்பட்டது. சென்னையில் தென்சென்னை மாவட்டத்திற்கு சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பாளர்கள் தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
கவுன்சிலர் பதவிக்கு ரூ.3 ஆயிரமும், மேயர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும் கட்டணமாக பெறப்பட்டது. இல.பாஸ்கரன், மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன் உள்பட 16 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
இதுபோல வடசென்னையில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், மத்திய சென்னையில் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஆகியோர் மனுக்களை பெற்றனர்.