செய்திகள்
கொள்ளை (கோப்புப்படம்)

செய்யாறில் சிவன், பார்வதி ஐம்பொன் சிலை கொள்ளை

Published On 2019-11-21 05:13 GMT   |   Update On 2019-11-21 05:13 GMT
செய்யாறு அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன்னால் ஆன சிவன், பார்வதி சிலையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
செய்யாறு:

செய்யாறு அடுத்த வட சின்னலூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு நடந்தது. அப்போது நந்தி மீது பார்வதி, சிவன் அமர்ந்திருப்பது போல் 1½ அடி உயரத்தில் 30 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி மணி (45) கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் இருந்த பார்வதி, சிவன் சிலை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணி அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டுப்போன சிலையின் மதிப்பு லட்சக் கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News