செய்திகள்
மது குடிப்பதை நிறுத்த முடியாமல் பெண் தற்கொலை
புதுச்சேரி அருகே மது குடிப்பதை கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை என செய்திகள் வருவதை அடிக்கடி பார்க்கலாம்.
ஆனால், புதுவையில் மது பழக்கத்துக்கு ஆளான பெண் ஒருவர் அதை கணவர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
புதுவை கொசப்பாளையம் திருமால் நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் (வயது 71)காவலாளி. இவரது மனைவி தாரா (61).
கணவன்- மனைவி இருவருக்குமே குடிபழக்கம் இருந்து வந்தது. ஆனால், தாரா அதிக அளவில் மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். எனவே, குருநாதன் தாராவை கண்டித்தார். மது குடிப்பதை நிறுத்தும்படி வற்புறுத்தி வந்தார்.
ஆனால், தாராவால் மது பழக்கத்தை கைவிட முடியவில்லை. கணவர் தொடர்ந்து கண்டித்ததால் மனவேதனை அடைந்த தாரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய குருநாதன் கதவை தட்டிப்பார்த்த போது கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்தார்.
அப்போது மனைவி தாரா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். பின்னர் தாராவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தாரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து உருளையன்பேட்டை உதவி சப்- இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை என செய்திகள் வருவதை அடிக்கடி பார்க்கலாம்.
ஆனால், புதுவையில் மது பழக்கத்துக்கு ஆளான பெண் ஒருவர் அதை கணவர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
புதுவை கொசப்பாளையம் திருமால் நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் (வயது 71)காவலாளி. இவரது மனைவி தாரா (61).
கணவன்- மனைவி இருவருக்குமே குடிபழக்கம் இருந்து வந்தது. ஆனால், தாரா அதிக அளவில் மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். எனவே, குருநாதன் தாராவை கண்டித்தார். மது குடிப்பதை நிறுத்தும்படி வற்புறுத்தி வந்தார்.
ஆனால், தாராவால் மது பழக்கத்தை கைவிட முடியவில்லை. கணவர் தொடர்ந்து கண்டித்ததால் மனவேதனை அடைந்த தாரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய குருநாதன் கதவை தட்டிப்பார்த்த போது கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்தார்.
அப்போது மனைவி தாரா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். பின்னர் தாராவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தாரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து உருளையன்பேட்டை உதவி சப்- இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.