செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே பெண் மர்ம மரணம்
ஆண்டிப்பட்டி அருகே மர்மமான முறையில் இறந்த பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கீழமஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது70). இவரது மனைவி நாகம்மாள் (61). 2 பேரும் சம்பவத்தன்று இறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் தூங்க சென்றனர். மறுநாள் காலை வாயில் நுரை தள்ளியபடி நாகம்மாள் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி இது குறித்து ராஜதானி போலீசில் புகார் அளித்தார்.
மேலும் நாகம்மாளை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பழனிச்சாமி ராஜதானி போலீசில் அளித்த புகாரில் அதில் தனது மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.