செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை - ஜெயக்குமார் பேட்டி

Published On 2019-11-19 16:51 GMT   |   Update On 2019-11-19 16:51 GMT
நடிகர் ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக மக்களின் நலனுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன் இணைவேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். முன்னதாக, கமலும், '' தேவைப்பட்டால், ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன்'' எனக்கூறினார்.

இவ்வாறு அவர்கள் இருவரும் கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் இரு கட்சிகளும் சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் தந்தி டிவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில்,

ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும், தனித்து இருந்தாலும் அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை. ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்ந்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும், 2021ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சிதான் என்றார்.
Tags:    

Similar News