செய்திகள்
கொலை மிரட்டல்

களக்காட்டில் மனைவிக்கு கொலை மிரட்டல்- கணவருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2019-11-19 16:38 GMT   |   Update On 2019-11-19 16:38 GMT
களக்காட்டில் காதல் திருமணம் செய்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
களக்காடு:

களக்காடு ஆர்.சி. தோப்புத் தெருவை சேர்ந்தவர் காதர் அம்மாள் (வயது30). இவரும் களக்காடு அருகே சிதம்பரபுரத்தை சேர்ந்த முகம்மது சாதிக் என்ற சேகரும் காதலித்து 19.07.2010-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் முகம்மது சாதிக் தொழில் தொடங்க மனைவி காதர் அம்மாளிடம் பணம் கேட்டார். இதையடுத்து காதர் அம்மாள் தனக்கு சொந்தமான 13 பவுன் தங்க நகைகளையும், மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி ரூ.40 ஆயிரமும் கொடுத்தார். ஆனால் முகம்மது சாதிக் கடனை அடைக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

காதர் அம்மாள் தனது மகள்களுடன் தாயார் வீட்டிற்கு வந்து விட்டார். சம்பவத்தன்று தாயார் வீட்டு முன் நின்று கொண்டிருந்த காதர் அம்மாளை, அங்கு வந்த முகம்மது சாதிக் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். 

இதுபற்றி அவர் நாங்குநேரி அனைத்து பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகம்மது சாதிக்கை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News