செய்திகள்
மீனவர் பலி

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி மீனவர் பலி

Published On 2019-11-19 09:51 GMT   |   Update On 2019-11-19 09:51 GMT
தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி மீனவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள லயன்டவுன் பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் பிரசாந்த்(வயது 17). இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். பிரசாந்த் கடந்த 17-ந்தேதி அன்று தனது நண்பர்களுடன் தூத்துக்குடி அருகே கோரம்பள்ளத்தில் உள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்றார்.

பின்னர் குளித்து முடித்து அனைவரும் வீட்டிற்கு சென்றனர். ஆனால் பிரசாந்த் மட்டும் வீடு திரும்பவில்லை. பிரசாந்த் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருப்பார் என பெற்றோர்கள் நினைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை கோரம்பள்ளம் பகுதியில் உள்ள குளத்தில் அவர் பிணமாக மிதந்தார். இது குறித்து அப்பகுதிக்கு சென்றவர்கள் புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்பு பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் குளத்தில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News