செய்திகள்
தமிழ்நாடு அரசின் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமனம்
தமிழ்நாடு அரசின் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தலைமை தகவல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமை தகவல் ஆணையராக 3 ஆண்டுளுக்கு ராஜகோபால் ஐ.ஏ.எஸ், பதவி வகிப்பார்.
1984-ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த ராஜகோபால், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் உள்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்த ஆனந்த்ராவ் விஷ்னு பாட்டீல் ஐ.ஏ.எஸ் தமிழக ஆளுநர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.