செய்திகள்
ராஜகோபால் ஐஏஎஸ்

தமிழ்நாடு அரசின் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமனம்

Published On 2019-11-18 16:07 GMT   |   Update On 2019-11-18 16:07 GMT
தமிழ்நாடு அரசின் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:

தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ்  தலைமை தகவல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமை தகவல் ஆணையராக 3 ஆண்டுளுக்கு ராஜகோபால் ஐ.ஏ.எஸ், பதவி வகிப்பார். 

1984-ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த ராஜகோபால், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் உள்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்த ஆனந்த்ராவ் விஷ்னு பாட்டீல் ஐ.ஏ.எஸ் தமிழக ஆளுநர் செயலாளராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News