செய்திகள்
மரணம்

கோவை ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர் மயங்கி விழுந்து பலி

Published On 2019-11-18 11:40 GMT   |   Update On 2019-11-18 11:40 GMT
கோவை ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மதுசூதனன் (வயது 39). கோவை ரெயில் வேயில் ஏ.சி. மெக்கானிக்காக இருந்தார். இவரது மனைவி வித்யா (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கோவை ரெயில் நிலையத்தில் வழக்கம்போல் பணிக்கு வந்தார்.

வாட்டர் பிளானட் அருகில் உள்ள ஏ1 பிளாட்பாரத்தில் அமர்ந்தார். பின்னர் திடீரென மயங்கி விழுந்தார். வெகுநேரம் விழுந்தே கிடந்தார். அந்த வழியாக சென்ற பயணிகள் அவர் தூங்கிக்கொண்டுள்ளார் என்று நினைத்தனர். வெகுநேரமானதால் சந்தேகமடைந்தசில பயணிகள் பார்த்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்குள்ள டாக்டருடன் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மதுசூதனனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News