செய்திகள்
காவேரிபட்டணம் விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பலி
காவேரிபட்டணம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம், பணகல் தெருப்பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயக்குமார் (வயது38). இவர் அப்பகுதியில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டில் இருந்து காவேரிபட்டணம் செல்லும் ரோட்டில் உள்ள சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.