செய்திகள்
எஸ்பி வேலுமணி

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை - எஸ்.பி.வேலுமணி

Published On 2019-11-16 10:30 GMT   |   Update On 2019-11-16 12:00 GMT
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை:

அமைச்சர் எஸ்.பி.வேலு மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப் பதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு புதிய மாவட்டங்களை திட்டமிட்டு பிரித்துள்ளதாகவும், இப் படி பிரிக்கப்பட்ட மாவட் டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் ஓட்டு பெறக்கூடிய ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், இனி 5 ஆயிரம் ஓட்டு பெறக்கூடிய வகையில் பிரித்து ஆளுங் கட்சி தேர்தலை நடத்தப் போகிறதா? என்ற சந்தே கத்தை எழுப்பி உள்ளார்.

மேலும் தேர்தலை நிறுத்தச் சொல்லி ஒரு வா£ர்த்தை கூட கூறாமல் உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கும், ஆளும் கட்சி திட்டமிட்டு வருகிறதோ? என சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

2016-ம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்து வதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்த பின்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதியால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொட ரப்பட்டது.

இந்த வழக்கு 21.9.2016-ல் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும், இந்த தீர்ப்பை எதிர்த்தும், மீண்டும் இந்த கோரிக்கையை வலி யுறுத்தியும் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ளது.

எனினும், தி.மு.க. உள் ளிட்ட பல்வேறு தரப் பினரின் கோரிக்கையை ஏற்றுதான் தமிழ்நாடு அரசு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்யும் வகையில் 21.7.2017-ல் தனது அறிவிக்கையின் மூலம் எல்லை மறுவரையறை ஆணையத்தை ஏற்படுத்தியது. மேற்படி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படை யில் உள்ளாட்சி வார்டு களின் மறுசீரமைப்பு அறிக்கை 14.12.2018 நாளிட்ட அரசிதழில் வெளியிடப் பட்டது. மேலும், மறு சீரமைக்கப்பட்ட வார்டு களின் அடிப்படையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டு 20.5.2019 மற்றும் 24.5.2019-ல் தமிழக அரசிதழ் மற்றும் மாவட்ட அரசிதழ்களில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

கடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மறுவரையறை செய்யப்பட்ட உள்ளாட்சி வார்டுகளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியினை துரிதமாக முடித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற் கான ஆயத்த பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் அரசை குறைசொல்லும் நோக்கில் இதுபோன்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.

பல்வேறு மாவட்டங்களை பிரிப்பது என்பது, அப் பகுதியில் வாழும் மக் களின் நெடுநாளைய கோரிக்கை, அதை ஏற்று செயல்படுத்துவது நிர்வாக நடைமுறையாகும். 2020-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் பூர்வாங்க பணிகள் தொடங்க இருப்ப தால், 31.12.2019-க்கு பின்னர் எந்த ஒரு நிர்வாக அலகையும் புதிதாக ஏற்படுத்தவோ, அல்லது அதை குறைக்கவோ இயலாது. எனவேதான், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப முதல்-அமைச்சரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியை தமிழ்நாடு அரசு விரைவாக முடித்து அதை நடைமுறைப்படுத்தி உள்ளது.

புதிய மாவட்டங்களை தோற்றுவித்தும், அவற்றின் எல்லைகளை வரையறுத்தும் வெளியிடப்பட்ட (அரசாணை எண்கள் 426, 428, 430 வருவாய்த்துறை நாள்: 12.11.2019) அரசாணை கள் பத்தி 7-ல் உள்ளாட்சி வார்டுகளில் மறுசீரமைப்பு பணி முடிவுற்றதாலும், உச்சநீதிமன்ற வழக்கு 1267/2018 இல் 17.07.2019 அன்று வழங்கப்பட்ட உத்தரவின்படி ஏற்கனவே தொடங்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதாலும், தற்போது மாவட்டங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டாலும், இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட எல்லை வரை யறைப்படி நடைபெறும். இந்த தேர்தல் பணிகளை எந்த வகையிலும் பாதிக் காது என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதில் எந்த வித குழப்பமும் இல்லை. தெளிவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப் பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் தேவைப்படின், உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற பின்னர் அரசால் அவை மேற் கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப் பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 2018-ம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக மறுவரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வார்டு களின் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என தெளிவு படுத்திக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள் ளார்.

Tags:    

Similar News