செய்திகள்
பெண் மாயம்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் மாயம்

Published On 2019-11-16 10:30 GMT   |   Update On 2019-11-16 10:30 GMT
மதுரையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை செக்கானூரணியை அடுத்த நத்தப்பட்டியை சேர்ந்த கணேசன் மகள் மகாலட்சுமி (வயது 29). என்ஜினீயரான இவர் சென்னையில் தங்கி கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் மகாலட்சுமிக்கு உறவினருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 24-ந் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்கிடையே அவர் சம்பவத்தன்று காலை ‘‘பியூட்டி பார்லருக்கு’’ செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். அதன் பிறகு மகாலட்சுமி வீடு திரும்பவிலலை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் பலன் இல்லை.

இது தொடர்பாக கணேசன் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தேடி வருகிறார். மேலும் அவரை யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

Similar News