செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

பொன்னேரியில் ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-11-15 08:45 GMT   |   Update On 2019-11-15 08:45 GMT
பொன்னேரியில் ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பொன்னகரைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்.

இவரது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து நேற்று காலை கந்தசாமி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற சென்றார்.

இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டுஉடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள், ஏ.டி.எம். கார்டை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல் வேம்பாக்கத்தில் பழைய இரும்பு கடையை உடைத்து கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொள்ளையர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News