செய்திகள்
கைது

மதுரையில் முதியவரை கத்தியால் குத்தியவர் கைது

Published On 2019-11-14 17:32 GMT   |   Update On 2019-11-14 17:32 GMT
முன் விரோத தகராறில் முதியவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

சமயநல்லூர் சாமிநாதன் நகரைச் சேர்ந்தவர் கோபால் நேரு (வயது 58). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ரவி (33) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ளது.

இந்த நிலையில் கோபால் நேரு சம்பவத்தன்று காலை பவர்ஹவுசில் உள்ள இரும்பு கடையில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ரவி தகராறில் ஈடுபட்டார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்து சண்டையாக மாறியது. இதில் கோபால் நேருவுக்கு சரமாரி கத்திக்குத்து விழுந் தது. இதையடுத்து அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோபால் நேரு சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News