செய்திகள்
கோப்பு படம்

சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 வாலிபர்கள் கைது

Published On 2019-11-14 12:21 GMT   |   Update On 2019-11-14 12:21 GMT
கோட்டக்குப்பத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:

கோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் இன்று அதி காலை கிழக்கு கடற்கரை சாலை கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் சோதனை செய்த போது, அவர்களின் சட்டை பையில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோட்டக்குப்பம் ஜமித் நகரை சேர்ந்த தமிமுன் அன்சாரி (வயது 23), கோட்டக்குப்பம் ரகமத் நகரை சேர்ந்த மெகபூப் ரகுமான் (29) என்பதும், இவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து விட்டு மீதம் உள்ள கஞ்சாவை சட்டை பையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய புதுவை வாலிபரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News