செய்திகள்
கோப்பு படம்

செங்குன்றத்தில் கணவருடன் தகராறு - மனைவி தற்கொலை

Published On 2019-11-14 11:25 GMT   |   Update On 2019-11-14 11:25 GMT
செங்குன்றம் அருகே கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம்:

புழல், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பிரசாத். ஊர்க்காவல் படை வீரர். இவரது மனைவி ஸ்ரீலட்சுமி (வயது 28). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதில் மனவேதனை அடைந்த ஸ்ரீலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம் புல்லிலைன் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. பெயிண்டர். இவரது மனைவி ராதிகா. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பாபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி. இவரது மனைவி விஜி (28).

வீட்டில் யாரும் இல்லாத போது விஜி திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜி இறந்தார்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆற்றம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி கூலி தொழிலாளி. இவரது மகன் ராஜேஷ் (19). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

இதை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News