செய்திகள்
முதல்வர் பழனிசாமி

உலகத்தரம் வாய்ந்த சாலைகளால் எளிதில் பயணிக்கலாம் - முதல்வர் பழனிசாமி

Published On 2019-11-13 13:54 GMT   |   Update On 2019-11-13 13:54 GMT
பாண்டி பஜாரில் சீரமைக்கப்பட்ட நடைபாதைகள், சாலைகளை திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி, உலகத்தரம் வாய்ந்த சாலைகளால் எளிதில் பயணிக்கலாம் என தெரிவித்தார்.
சென்னை:

பனகல் பூங்கா- பாண்டி பஜார் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் மற்றும் சீர்மிகு சாலைகளை இன்று மாலை நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அப்போது பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள சீர்மிகு சாலைகளில் பேட்டரி காரில் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அதன்பின்னர், முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தமிழகம் 8-வது இடத்தில் உள்ளது.

உலகத்தரம் வாய்ந்த சாலைகளும், நடைபாதைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் எளிதாக பாண்டி பஜார் பகுதியில் பயணம் செய்ய முடியும். போதிய நிதி ஆதாரத்தை திரட்டி அனைத்து சாலைகளும் படிப்படியாக சீரமைக்கப்படும் என தெரிவித்தார். 
Tags:    

Similar News