செய்திகள்
மாயம்

சுசீந்திரம் அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2019-11-13 13:42 GMT   |   Update On 2019-11-13 13:42 GMT
சுசீந்திரம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

சுசீந்திரம் தேரூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் பவித்ரா (வயது 22). இவர் இறச்சகுளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில்  பி.எட். படித்து வருகிறார். தற்போது சுசீந்திரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அவர் பயிற்சிக்காக சென்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி பள்ளிக்குச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மாணவியை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News