செய்திகள்
மதுரையில் பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சி- வாலிபர் கைது
மதுரையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை சிலைமானைச் சேர்ந்த திருமணமான 25 வயது இளம்பெண், ஜவுளிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
அதே கடையில் திருமங்கலம் வடகரை புதூரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 31) என்பவரும் பணி செய்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் கடையின் கிட்டங்கி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண்ணை சுரேஷ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். அந்தப்பெண் கூச்சலிட்டதால் சுரேஷ் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர்.