செய்திகள்
மரணம்

வேப்பம்பட்டில் ஏரியில் மூழ்கி தாய்-மகள் பலி

Published On 2019-11-13 06:45 GMT   |   Update On 2019-11-13 06:45 GMT
வேப்பம்பட்டில் ஏரியில் மூழ்கி தாய்-மகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்தவர் சுகுணா (44). இவரது மகள் ரோஜா (20).

நேற்று மாலை இவர்கள் 2 பேரும் தாங்கள் வளர்த்து வந்த மாட்டை குளிப்பாட்ட அருகில் உள்ள ஏரிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் இன்று காலை ஏரியில் 2 உடல்கள் மிதப்பதாக செவ்வாப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசுக்கும் இது தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 2 உடல்களையும் மீட்டனர். அப்போது ஏரியில் மூழ்கி பலியானது சுகுணா, அவரது மகள் ரோஜா என்பது தெரிந்தது.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News