செய்திகள்
காதல் ஜோடி தஞ்சம்

திருமண மண்டபத்தில் மாயமான மணப்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்

Published On 2019-11-12 13:26 GMT   |   Update On 2019-11-12 13:26 GMT
திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கேட்டு மாயமான மணப்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஒன்னல்வாடியை சேர்ந்தவர் மோனிகா (வயது 23). அதேபகுதியை சேர்ந்தவர் எட்வின் பிரியன் (வயது 27). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த இருவீட்டார் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மோனிகாவிற்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்தனர். அதன்படி, மோனிகாவுக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் அதிகாலை திடீரென மணப்பெண் மோனிகா மாயமானார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மோனிகாவும், எட்வின் பிரியனும் ஓசூரில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மணப்பெண் காதல் கணவருடன் ஓசூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்புகேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களது பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News