செய்திகள்
ஏர்வாடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஊழியர் பலி
ஏர்வாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள கீழகட்டளையை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் கிருபா கிருஷ்ணகுமார் (வயது 29). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மாலை அவர் தனது பைக்கில் வள்ளியூரில் இருந்து கீழகட்டளைக்கு சென்று கொண்டிருந்தார்.
அவர் ஏர்வாடி-டோனாவூர் ரோட்டில் புலியூர்குறிச்சியில் சென்ற போது எதிரே கடம்பன்குளத்தை சேர்ந்த பலவேசமுத்து மகன் சிவபெருமாள் ஓட்டி வந்த பைக்கும், கிருபா கிருஷ்ணகுமார் ஓட்டி சென்ற பைக்கும் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கிருபா கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது சகோதரி ரேவதி பிரியதர்சினி (33) ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இது தொடர்பாக சிவபெருமாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர்வாடி அருகே உள்ள கீழகட்டளையை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் கிருபா கிருஷ்ணகுமார் (வயது 29). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மாலை அவர் தனது பைக்கில் வள்ளியூரில் இருந்து கீழகட்டளைக்கு சென்று கொண்டிருந்தார்.
அவர் ஏர்வாடி-டோனாவூர் ரோட்டில் புலியூர்குறிச்சியில் சென்ற போது எதிரே கடம்பன்குளத்தை சேர்ந்த பலவேசமுத்து மகன் சிவபெருமாள் ஓட்டி வந்த பைக்கும், கிருபா கிருஷ்ணகுமார் ஓட்டி சென்ற பைக்கும் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கிருபா கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது சகோதரி ரேவதி பிரியதர்சினி (33) ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இது தொடர்பாக சிவபெருமாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.