செய்திகள்
விருதுநகரில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்- வாலிபர் கைது
விருதுநகரில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் அல்லம்பட்டி, கண்ணபிரான் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி தங்கமாரியம்மாள் (வயது 28). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சங்கர் (23). இவர் தங்கமாரியம்மாளை சில மாதங்களுக்கு முன்பு கேலி செய்ததாக தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று சங்கர் மீண்டும் தகராறு செய்ததோடு, தங்கமாரியம்மாளை தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சங்கரை கைது செய்தனர்.