செய்திகள்
நகை பறிப்பு

டி.கல்லுப்பட்டி அருகே மூதாட்டியிடம் 4 பவுன் பறிப்பு

Published On 2019-11-12 09:24 GMT   |   Update On 2019-11-12 09:24 GMT
டி.கல்லுப்பட்டி அருகே மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காடனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. இவரது மனைவி ஜெயராணி (வயது 63). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ள கண்மாய்க்கரையில் உள்ளது.

சம்பவத்தன்று ஜெய ராணி தோட்டத்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் அங்கு வந்து பேச்சு கொடுத் தார்.

திடீரென அந்த நபர் ஜெயராணியை தாக்கி அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.

இது குறித்து டி.கல்லுப் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின் றனர்.

Tags:    

Similar News