செய்திகள்
மேயர்களை மக்கள்தான் தேர்ந்து எடுப்பார்கள் -எடப்பாடி பழனிசாமி
மேயர்களை மக்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், மறைமுகமாக தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்:
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் சோதனைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். நீதிமன்ற உத்தரவின்படியே காவல்துறை செயல்பட்டு வருகிறது. கட்சிகளின் கொடி கம்பங்களை நடக்கூடாது என்ற உத்தரவு இதுவரை இல்லை.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதில் அரசுக்கு தொடர்பு இல்லை. தேர்தலுக்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால் விருப்ப மனு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாநகராட்சி மேயர்களை மக்களே நேரடியாக தேர்ந்து எடுப்பார்கள். மறைமுகமாக தேர்வு செய்யப்படமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.