செய்திகள்
கைது

செங்குன்றத்தில் குண்டர் சட்டத்தில் 5 ரவுடிகள் கைது

Published On 2019-11-12 06:50 GMT   |   Update On 2019-11-12 06:50 GMT
செங்குன்றத்தில் குண்டர் சட்டத்தில் 5 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம், நவ. 12-

செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பால கணேஷ் நகரைச் சேர்ந்தவர் சேது என்கிற சேதுபதி. சோலையம்மன் நகரைச் சேர்ந்தவர் முத்து சரவணன். இவர்கள் இருவரும் ரவுடி கள். இவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

செங்குன்றம் பகுதியில் நடந்த 5 கொலை வழக்குக ளில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி சேது மற்றும் இவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் முத்துசரவணன் அவரது கோஷ்டியைச் சேர்ந்த ரவுடிகள் பசுபதி, மலர்வாணன், ஸ்ரீதர், ரமேஷ் உள்ளிட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News