செய்திகள்
கைது

ராஜபாயைம் பகுதியில் மது விற்ற 8 பேர் கைது

Published On 2019-11-11 11:35 GMT   |   Update On 2019-11-11 11:35 GMT
ராஜபாயைம் பகுதியில் மது விற்ற 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் உத்தரவின் பேரில் சட்ட விரோதமாக மது விற்பதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. நாகசங்கர் ஆலோசனையின் பேரில் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லிங்குசாமி (தெற்கு), கவுதம் விஜய் (தெற்கு), முத்துக்குமரன் (வடக்கு), சேகர் (வடக்கு), மகாலிங்கம் (கீழராஜகுலராமன்), திவ்யா (சேத்தூர்), லவகுசன் (தளவாய்புரம்), பெருமாள்சாமி (தளவாய் புரம்) மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற ராஜகுரு (வயது 30), ராஜகோபால் (47), மனோகரன் (54), சாசாங்கம் (45), நாராயணன் (65), ரஞ்சித்குமார் (36), ஆறுமுகசாமி (68), வனராஜ் (38) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 62 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News