செய்திகள்
முசிறி பகுதியில் மது விற்றவர் கைது
முசிறி பகுதியில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி:
முசிறி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக முசிறி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இது குறித்து தகவலறிந்த சப்- இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வடக்கு சேந்தமாங்குடி முள்காட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கத்தை (வயது52) போலீசார் கைது செய்து மது அவரிடமிருந்த பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.