செய்திகள்
வானிலை நிலவர வரைபடம்

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2019-11-11 08:59 GMT   |   Update On 2019-11-11 08:59 GMT
கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

பருவமழை தொடங்கி ஒரு வாரம் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை குறைந்தது.

உருவான மூன்று புயல்களால் எதிர்பார்த்த அளவு மழை கிடைக்கவில்லை. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஏனைய உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்த வரை வானம் லேசாக மேக மூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News