செய்திகள்
ரஜினிகாந்த்

அயோத்தி தீர்ப்பை மதிக்கிறேன் -ரஜினிகாந்த்

Published On 2019-11-09 08:43 GMT   |   Update On 2019-11-09 08:43 GMT
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிப்பதாக சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தீர்ப்பை வாசித்தார்.

சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு தொடர்பாக சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


அயோத்தி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்கிறேன். தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் மத பேதம் இன்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  
Tags:    

Similar News