செய்திகள்
தற்கொலை முயற்சி

திருச்சி ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

Published On 2019-11-08 11:40 GMT   |   Update On 2019-11-08 11:40 GMT
திருச்சி ஆயுதப்படை பெண் போலீஸ் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் தஸ்லிம் பானு (வயது 19). சமீபத்தில் போலீஸ் வேலையில் சேர்ந்த இவர், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படையில் பயிற்சி பெற்று வந்ததுடன், அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்து வந்தார்.

இன்று காலை தஸ்லிம் பானு அவர் தங்கியிருந்த அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த மற்ற காவலர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. போலீஸ் வேலை பிடிக்காததால் அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? அல்லது அதிகாரிகள் டார்ச்சர் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News