செய்திகள்
போடி அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
போடி அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
போடி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 42). சொந்தமாக டிராக்டர் வைத்து வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் இவருக்கும் அவரது மனைவி பாக்கியலெட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இனிமேல் குடித்து விட்டு வந்தால் நான் பேச மாட்டேன் என பாக்கியலெட்சுமி கூறி விட்டு தனது சித்தி வீட்டுக்கு சென்று விட்டார்.
மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது பாண்டியராஜன் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்து போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.