செய்திகள்
துரைமுருகன்

வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டன- ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி

Published On 2019-11-08 08:20 GMT   |   Update On 2019-11-08 08:20 GMT
தமிழகத்தில் இருந்த அரசியல் தலைமைக்கான வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டதாக துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது,  தமிழகத்தில் சரியான, ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது, என்று கூறினார். 

இதுபற்றி திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதாவது:-

வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம்; தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டன. 

தமிழகத்தின் தட்பவெப்ப அரசியல் குறித்து ரஜினிக்கு தெரியவில்லை. ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News