செய்திகள்
கர்நாடகாவிற்கு கடத்த இருந்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்- தர்மபுரி டிரைவர் கைது
கர்நாடகாவிற்கு கடத்த இருந்த 2 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து தர்மபுரி டிரைவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பறக்கும் படை தனி தாசில்தார் பிரதாப், தனி வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் உள்ள முனியப்பன் கோவில் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தர்மபுரியில் இருந்து பெங்களூர் நோக்கிசென்று கொண்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சிறு மூட்டைகளாக கட்டி இரண்டு டன் ரேசன் அரிசியை கடத்திக்கொண்டு பெங்களூர் நோக்கி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வண்டியை ஓட்டிவந்த தர்மபுரி மாவட்டம் தட்டாராம்பட்டியை சேர்ந்த அஜீத்(21) என்பவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வண்டியை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.