செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்து

கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - விவசாயி பலி

Published On 2019-11-06 17:48 GMT   |   Update On 2019-11-06 17:49 GMT
மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி பலியானார்.
ராயக்கோட்டை:

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் உமே‌‌ஷ் (39). விவசாயிகளான இவர்கள் 2 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் கெலமங்கலத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த முனியப்பன் (27) என்பவர் எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். துளசி நகர் அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிவலிங்கம் வழியிலேயே இறந்து விட்டார். உமே‌‌ஷ், முனியப்பன் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News