செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

சிவகிரி அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2019-11-06 11:01 GMT   |   Update On 2019-11-06 11:01 GMT
சிவகிரி அருகே உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் வாகனம் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகிரி:

சிவகிரி இல்லம்பிள்ளை தெற்கு தெருவை சேர்ந்தவர் நீராத்லிங்கம். இவரது மனைவி முருகேஷ்வரி. இவர்களது மகன் ரமேஷ் (வயது 24). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்களது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக ரமேஷ் ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு ரமேஷ் சாப்பாடு வாங்குவதற்காக தேவிப்பட்டிணம் விலக்கு பகுதிக்கு சென்றார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரமேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News